www.gamblinginsider.ca

17 November 2017

என்னு நிண்டே மொய்தீன்😍😍 - Mano Red


//
காஞ்சனமால-மொய்தீனுடைய காதல்... சேர்ந்திருந்து... பிரிந்திருந்து... காத்திருந்து... மீண்டும் சேராமல் போன காதல். கோழிக்கோட்ல படிச்சிட்டு இருப்பாங்கனு நினைக்கிறேன். ரெண்டு பேருமே ப்ரண்ட்ஸ். மதம் கடந்து ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல உறவும் இருக்கும். மேற்படிப்புக்காக பிரிஞ்சு தொடர்பே இல்லாம இருப்பாங்க. திடீர்னு ஒருநாள்... (அந்த சீன் அழகா இருக்கும்) பேருந்துப் பயணம்; அதுல கண்ணாடி வழியா ஹீரோவோட கண்ணு பாக்குறத ஹீரோயினோட கண்ணு பாத்துரும். மென்மையான சிரிப்புல பழசு ஞாபகம் வர திரும்பிப் பாக்கும்போது காஞ்சனமாலயின் மொய்தீன் தெரிவான். அந்த செகண்ட்ல பட்டாம்பூச்சி பறக்காத, லைட் அணைஞ்சி எரியாத, இதயத்தின் ஆழத்திலிருந்து வெடித்தெழக் கூடிய காதலை காஞ்சனை உணர்வாள்.
காதல் துளிர்த்த பிறகு கடிதம்; வீட்ல சண்டை; தனிமைச் சிறை; குடும்ப பிரச்னை; எதிர்ப்பு எனக் கடந்து போகும். அதற்குள்ளாக காதல் இவர்களது இதயத்தை கான்கிரீட் பூக்களால் நிரப்பியிருக்கும். பிரச்னைகளைச் சமாளிக்க இருவர் மட்டுமே புரிந்துகொள்ளும் புதுமொழியை கவிதைப் புத்தகங்களில் அடிக்கோடிட்டு உருவாக்கியிருப்பார்கள். மறுப்பும் வெறுப்பும் கூடக் கூட தன் காதல் விவகாரம் தங்கைகளின் வாழ்க்கைக்கு வினையாகி விடக்கூடாது என்பதற்காக சற்று இடைவெளிவிட்டு வலிகளுடன் காத்திருப்பாள் பார்வதி என்கிற காஞ்சனா. எத்தனை விதமான பார்வைகள், முக அசைவுகள், உதடு சுழிப்புகள், வெக்கங்கள், கோபங்கள், அமைதிகள், அழுகைகள் என காதலின் உன்மத்தங்களை அதீதமாகக் காட்டி காஞ்சனையாக வாழ்ந்திருக்கும் பார்வதிக்காக மொய்தீனும் காத்திருப்பான். மழையில் காதலித்த அவர்கள் பல போராட்டங்கள் தாண்டி ஒன்று சேரும்போது அந்த மழைதான் அவர்கள் பிரியக் காரணமாகியிருக்கும்.
படத்தின் முடிவு...
* "காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை"
இல்லை! காஞ்சனமாலைக்கு மொய்தீன் கிடைத்தான். எங்கும் போகாமல் இன்னும் கிடைத்துக் கொண்டே இருக்கிறான்.
* "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி" ஆம்! காஞ்சனை அங்கே காத்திருந்த காலங்களில் மொய்தீனின் பூவிழி எப்படி நோகாமல் இருந்திருக்கும்... இருந்தாலும் இருவரும் பூத்துக்கொண்டுதான் இருந்தார்கள்... இன்றும் இருக்கிறார்கள்.
* "காத்திருந்து கதை பேசும்
காலமும் முடியல
சேர்ந்திருந்து பிறை பாக்க
ராத்திரி விடியல"
ஆம்! அவர்கள் சேராமல் போயிருந்தாலும் ஒவ்வொரு பிறை வரும்போதும் எங்காவது காதல் கதை பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான அந்த இரவு, விடியாமலே நீண்டு நீண்டு அவர்களை இன்னும் காதலித்து கொண்டுதான் இருக்கும்.
Mano Red / 6.11.17