www.gamblinginsider.ca

13 April 2013

நண்பனே..!!பொல்லாத காதல் நமக்குள் வேண்டாம்..!!


நண்பா நண்பா புரிந்து கொள், 
நாம் இருவரும் நண்பர்களே..!!! 
நண்பா நண்பா தெளிந்து கொள், 
நாம் இருவரும் காதலர்களில்லை..!! 

தோழா தோழா, 
உன் விரல்கள் நான் பிடித்தது 
காதல் கரம் பிடிக்க அல்ல, 
வாழ்நாள் முழுக்க கைவிடாமல் இருக்க...!! 
உன் தோளில் நான் சாய்ந்தது 
கணவன் நினைப்பில் அல்ல, 
கண் கலங்க விடாத நண்பன் நினைப்பில்..!! 
உன்னுடன் நான் விளையாடியது, 
காதல் நோக்கம் அல்ல, 
நம் நட்பின் தொலை நோக்கம்..!! 

தோழா தோழா, 
யாருக்கும் தெரியாமல் நடிக்கும் 
பொல்லாத காதல் வேண்டாம்..!! 
நீ என்னை எண்ணி உன்னை வெறுக்கும், 
கொடிய நினைவுகள் வேண்டாம்..!! 
தினமும் நீ காதல் கவிதை என்னிடம் சொல்ல, 
அது கண்டு நான் ஓடும் நரக நாட்கள் வேண்டாம்..!! 
இதயம் துடிதுடிக்க செய்யும், 
இன்னல்களின் இம்சை வேண்டாம்..!! 

தோழா தோழா, 
உன்னிடம் நான் உரிமை கொள்வேன், 
சில நேரம் உயிரும் கேட்பேன், 
அன்பில் உன் உயிரையும் எடுப்பேன், 
தோளிலும் சாய்வேன், 
தொல்லையும் பல தருவேன், 
இதெல்லாம் உன் சில நாள் காதலியாக அல்ல, 
முடிவில்லா நட்பில் நண்பியாக மட்டும்..!!!