சொன்னால் நம்ப மாட்டீர்கள், அவள் சொல்லும் பொய்கள் கூட உண்மை போல மாறிப்போவது, அவளுக்காக வார்த்தைகள் செய்யும் தற்கொலையே...!! என்னை பற்றிய பொல்லாத நினைவுகள், எனக்கே பிடிக்காத போது, அவள் என்னை பொறுக்கி எடுத்து கிறுக்கிய கிறுக்கலில் நான் நானாகிவிட்டேன்..!!
அவளிடம் சொல்ல நான் தேடி வைத்திருந்த வார்த்தைகளெல்லாம், அவளை பார்த்ததும் ஓடி மறைந்தன, பேச தெரியா குழந்தையாய் நான்...!!
அவளுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல், முன் ஜென்மத்தில் அவளின் பெயர்கள் பேரழகி,தேவதை,பட்டாம்பூச்சி, என்றே தான் இருந்திருக்கும்..!!
பிடிவாதம் பிடித்து அழும் குழந்தை அவளென்றால், தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் ரசிகனாக நானாவேன், அவளின் கண்ணீரை துடைக்காமல்..!!
யாரிடம் கேட்டாலும் தயங்காமல் சொல்வார்கள், அவளை போல அழகி யாரையும் பார்த்ததில்லை என்று, ஆனால் சிரித்து கொண்டே அவள் சொல்வாள் இது தான் மிகப்பெரிய பொய் என்று..!!